அதாவது 24 மணி நேரமும் 1 செக்கனும் என்று வரும். இவ்வாறு வருவதை நாம் லீப் நேரம் என்று கூறுகிறோம். பொதுவாக கம்பியூட்டர்களும் சரி அதில் உள்ள மணிக்கூடும் சரி, 60 செக்கனை மையமாகக் கொண்டு தான் அனைத்தையும் இயக்குகிறது. இதேவேளை தற்போது அது 1 செக்கனால் அதிகரித்துள்ள நிலையில், 61 செக்கன் ஆகிறது. இதனால் பல கம்பியூட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திடீரென ஷாட் டவுன்(ஆப்) ஆகி விடும் வாய்ப்பு உள்ளதாக கூகுள் நிறுவனம் இன்று கண்டுபிடித்துள்ளது.
சர்வதேச அளவில் உள்ள எல்லா டிஜிடல் மணிக்கூடுகளிலும், 31ம் திகதி இரவு 12 மணிக்கு 61 செக்கன் காட்ட உள்ளது. இதனால் பல கம்பியூட்டர்கள் நிலை தடுமாறி நின்றுவிடும். எனவே இனரர் நெட் உலகம் இருட்டில் போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில். இன்றில் இருந்து சுமார் 1 நானோசெக்கனை ( அதாவது செக்கன், அதனை 60 பிரித்தால் மைக்ரோ செக்கன், அதனை 60 ல் பிரித்தால் நானோ செக்கன்) கழிக்க ஆரம்பிக்கிறார்கள். அவ்வாறு கழித்துக்கொண்டு வந்தால் தான் 31ம் திகதி இரவு அன்று இதனை சரிசெய்து 60 செக்கனில் கொண்டு வந்து முடிக்க முடியும்.
உலகத்தில் உள்ள அனைத்து கம்பியூட்டர்களும், டியிடல் கடிகாரங்களும், இன்ரர் நெட்டோடு தொடர்புடைய அனைத்து சாதனங்களும் இதற்கான அப்டேட்டை தாமே செய்ய ஏதுவாக, ஆப்பிள் , மைக்கொரோ சாஃப்ட் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இதனை சீர் செய்து வருகிறார்கள். 2000ம் ஆண்டில் அனைத்து கம்பியூட்டர்களும் 0 வாகி செயல் இழந்து போகும் என்ற நிலை தோன்றி இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அதனை பின்னர் சரிசெய்துகொண்டார்கள் அல்லவது. அது போன்றே இங்கேயும் நடந்துள்ளது.
: http://www.express.co.uk/life-style/science-technology/748153/Internet-Shutdown-Leap-Second-New-Years-Eve-2016
கருத்துரையிடுக