சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர் கைப்பட எழுதி படுக்கையில் வைத்திருந்த கடிதத்தை குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், தனது சாவுக்கு பள்ளியின் தாளாளர் சரவணன் தான் காரணம் என சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் அதிரச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் அவரது அத்தை வீட்டிகரரான சரவணன் பள்ளியின் தாளாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு சிறுமி அவரது வீட்டிற்கு சென்ற போது சரவணன் மயக்க மருத்து கொடுத்து சிறுமியை சீரழித்துள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து சரவணனின் பாலியல் தொல்லை தாங்க முடியாத சிறுமி இரண்டு மாதத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, உண்மையை கண்டறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சரவணனை உறவினர் என்பதால் தண்டிக்காமல் விட்டுள்ளனர்.
இதனையடுத்தும் சரவணன் மீண்டும் மீண்டும் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமியின் அத்தை கணவரான சரவணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கருத்துரையிடுக