உத்திரபிரதேசத்தின் முசாபர் நகரில் கஸ்தூரிபா பெண்கள் உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கழிவறையின் மூலையில் மாதவிலக்கினால் ஏற்பட்ட ரத்தகறை படிந்துள்ளது, இதை பார்த்த வார்டன் யார் இதை செய்தது என்று கேட்டுள்ளார்.
அனைவரும் பதில் கூறாமல் இருக்கவே, அங்கிருக்கும் 70 மாணவிகளையும் அழைத்து வந்து வரிசையாக நிற்க வைத்து ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால் இதுதவறான தகவல் என்றும், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனவும் வார்டன் கூறியுள்ளார்.
மேலும் தான் கடுமையாக நடந்து கொள்வதால் மாணவிகள் வேண்டுமென்றே பழிபோடுவதாகவும் கூறியுள்ளார்.
கருத்துரையிடுக