கடந்த 2016 ஆம் ஆண்டில், மாலியின் Gao பகுதியில் வைத்து Sophie Pétronin எனும் பிரெஞ்சு பெண்மணி கடத்தப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. தற்போது அவர்கள் ஒரு திகதி குறிப்பிடப்படாத காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். 16 நிமிடங்களும் 50 வினாடிகளும் ஓடக்கூடிய அந்த காணொளியில், Sophie Pétronin உட்பட ஐந்து வெளிநாட்டினர் பிணையக்கைதியாக பிடித்து வைத்திருப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த காணொளி டெலிகிராம் போன்ற சமூகவலைத்தளம் ஊடாக 'இஸ்லாமியத்துக்கு ஆதரவளியுங்கள்!' என குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட ஏனைய வெளிநாட்டினரும் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து, இவ்வருடம் 2017 ஆம் ஆண்டு வரை கடத்தப்பட்டவர்களாகும். கடத்தப்பட்ட Sophie Pétronin, சிறுவர்களுக்கான உதவும் அமைப்பு ஒன்றை நடத்தி வருவதும், மாலியில் உள்ள சிறுவர்களுக்கு உதவிட அங்கு சென்றிருந்ததும், பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக