பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.
அந்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரிடம் அவர் காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார்.
காரை சோதனை செய்த திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கார் விற்பனையாளரிடம்ம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
அதற்கு அவர், காரை விற்பனை செய்தவுடன் தங்கள் பணி முடிவடைந்துவிட்டதாகவும், இனிமேல் எதற்கும் தாம் பொறுப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண், கார் விற்பனையாளரின் வீட்டின் முன் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் வீட்டின் வேலிகள் மற்றும் கதவுகளை கற்களை வீசி சேதப்படுத்தினார்.
பெண்ணின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதசாரிகள், இதுகுறித்து பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த பொலிஸாரிடம், அருகே இருக்கும் மருத்துவமனையில் அவருக்கு மனநல சோதனை நடத்தினர்.
சிகிச்சை முடிந்த பின் பொலிஸாரிடம் அவரிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக