இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

தமிழ்நாட்டில் இரும்பு கம்பியால் மனைவியை அடித்து கொன்ற கணவன் ஏன் தெரியுமா?

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் விநாயகம் (47) இவர் மனைவி பிரேமா (43) இவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.

இதில் ரூபிணி (20) என்ற மகள் பெற்றோர் வசிக்கும் பகுதியிலேயே வசித்து வந்தார்.

விநாயகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

எனவே குடும்ப செலவுக்காக பிரேமா கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட விநாயகம், மனைவிக்கு வேறு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்

இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன் மற்றும் மனைவிக்குள் மீண்டும் சண்டை ஏற்பட, ஆத்திரம் அடைந்த விநாயகம் இரும்பு கம்பியால் பிரேமாவின் தலையில் ஓங்கி அடித்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.

பின்னர், பயத்தில் விநாயகம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

ரூபிணி தாய் வீட்டுக்கு சென்று பார்த்த போது பிரேமா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

தலைமறைவாக உள்ள விநாயகத்தை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும், இது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நடந்த கொலையா அல்லது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகம் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது கொல்லப்பட்டாரா என விநாயகத்தின் நண்பர்களை பிடித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.