இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

ராம்குமார் தற்கொலை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறைத்துறை அளித்த ஷாக் ரிப்போர்ட்

ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறைத்துரை பதில் அளிக்க மறுத்துள்ளது.


தமிழகத்தையே உலுக்கிய சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராம்குமார் தற்கொலை வழக்கு குறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா ஆர்டிஐ மூலம் கேள்விகள் கேட்டு இருந்தார்.

அதில், தற்கொலை செய்துக்கொண்ட கைதிகளின் விவரம், மின்சாரம் தாக்கி இறந்த கைதிகளின் விவரம், சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

இதற்கு சென்னை புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே பதில் அளித்துள்ளது. ராம்குமார் தொடர்பான கேள்விகளுக்கு சிறைத்துறை பதில் அளிக்கவில்லை. இதனால் வழக்கறிஞர் பிரம்மா மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.