பருவமழை பொய்ப்பு, விவசாய விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, வறட்சியால் பாதிக்கப்பட்ட போதும் வங்கிக் கடனை திருப்பி செலுத்துவது என விவசாயிகள் அனைத்து வகைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு, மானியம் வழங்கப்படுகிறதே தவிர அவர்களின் அடிப்படை பிரச்னையை ஆராய்ந்து அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மாடு வாங்க காசு இல்லாமல் தனது இரு மகள்களை மாடுகளாகப் பயன்படுத்தி ஏர் பூட்டி உழவு செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரணமாக எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய தனது இரு மகள்களை மாடுகளுக்குப் பதிலாக ஏர் பூட்டி உழுததாக தெரிவித்துள்ளார் விவசாயி சர்தார் பரேலா.
இந்தியாவில் விவசாயியின் நிலை இதுதான்…
கருத்துரையிடுக