இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

அதி பயங்கரவாதி: இவரைப் பிடிக்க நுளம்பை தேடி அலையும் பொலிசார் ஏன் தெரியுமா?

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பசிலோனாவில் நடந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த நபர் இந்த எஸ் சட்டி. இவரை கண்டு பிடிக்க , நுளம்புகளை கூட சல்லடை போட்டு தேடுகிறார்கள் பொலிசார் என்றால் பாருங்கள் . எஸ் சட்டி என்னும் 45 வயது இஸ்லாமிய மத போதகைரை தேடி வரும், ஸ்பெயின் நாட்டு பொலிசார். பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். ... ஏன் என்பது ஒரு சுவாரசியமான தகவல், வாருங்கள் அதிர்வின் செய்திக்கு செல்லலாம்...



குறித்த மத போதகர் கடந்த 3 மாதங்களின் முன்னர் தான் தீவிரவாதிகளோடு தொடர்பை ஏற்படுத்தி. ஜிஹாடி தீவிரவாதியாக மாறியுள்ளார் என்பது உண்மை. இவர் பல தாக்குதல் திட்டங்களை தீட்டிக் கொடுத்தது மட்டுமல்லாது. அதற்கான ஆட்களையும் , ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அத்தோடு குண்டுகளையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பசிலோனா தாக்குதல் நடந்த பின்னர். இவர் மொறாக்கோ நாட்டுக்கு சென்றுவிட்டார். அவர் அங்கே குண்டு ஒன்றை தயாரிக்கும் வேளை, அது வெடித்து அவர் இறந்துவிட்டதாக இன்ரர் போல் பொலிஸ் ஊடாக ஸ்பெயின் நாட்டு பொலிசார் அறிந்து கொண்டார்கள்.


குண்டு வெடித்ததில் சிறு சிறு துண்டுகளாக அவரது உடல் சிதறிவிட்டது என்கிறார்கள். இவர்கள் போன்ற பெரும் தீவிரவாதிகளை பாதுகாக்க அடிக்கடி ஐ.எஸ் அமைப்பு, இப்படி கூறுவது வழக்கம். அவர் இறந்துவிட்டார் என்று ஐ.எஸ் அமைப்பே கூறினால். அவரை தேடும் பொலிசார், தேடுதலை கைவிட்டு விடுவார்கள் அல்லவா. ஆனால் இதனை நம்பாத ஸ்பெயின் நாட்டு பொலிசார் ஒரு உக்தியை கையாண்டுள்ளார்கள். அது என்னவென்றால். எஸ் சட்டி தங்கியிருந்த , வீட்டை இதுவரை காலமும் மூடிவைத்திருந்த அவர்கள். அங்கே சென்று சல்லடை போட்டு தேடிய ஒரு விடையம் நுளம்பு(கொசு) ஆகும். எல் சட்டியை கடித்த நுளம்பு ஏதாவது இருந்தால். அதில் உள்ள ரத்தத்தை வைத்து டி.என்,ஏ பரிசோதனை செய்ய முடியும். அத்தோடு மூட்டை பூச்சி தொடக்கம், தலை முடி , சுவிங்கம் என்று, என்ன பொருள் கிடைக்குமோ அத்தனையையும் தேடி வருகிறார்கள்.

வெடித்து சிதறிவிட்டதாக கூறப்படும் எல் சட்டியின் ஒரு சிறிய தசை மட்டுமோ இன்ரர் போல் பொலிசாரிடம் உள்ளது. அதில் உள்ள ரத்த மாதிரியை வைத்து. ஸ்பெயின் நாட்டில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள ஏதாவது ஒன்றின் டி.என்.ஏ அதனோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்கவே , அன் நாட்டு பொலிசார் முயற்ச்சி செய்கிறார்கள். மிகவும் ரகசியமான முறையில் நடந்து வந்த இந்த விசாரணை தற்போது ஸ்பெயின் நாட்டு ஊடகம் ஒன்றின் வாயிலாக வெளிவந்துள்ளது. இதனை அதிர்வு இணையம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.