பெங்களூர் ஜே.பி நகர் அருகே உள்ள ஜரகனஹள்ளியில் வசித்து வருபவர் ஸ்வாதி சர்க்கார்.
இவரது கணவர் பெயர் கஞ்சன் சர்க்கார். ஐ.டி கம்பெனி ஊழியர். கணவரை விட்டு பிரிந்த ஸ்வாதி தற்போது தனியாக 9 வயது மகள் ஸ்ரேயாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ஸ்வாதி தான் குடியிருக்கும் வீட்டின் 3வது மாடிக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்று அங்கிருந்து பெற்ற மகள் என்றும் பாராமல் கீழே தூக்கி எறிந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரேயா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இருந்தாலும் ஆத்திரம் அடங்காத ஸ்வாதி கீழே வந்து ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மகளை படிக்கட்டு வழியாக ரத்தம் சொட்ட சொட்ட தரதரவென இழுத்து சென்றார்.
இதனை பார்த்த அந்த குடியிருப்பில் இருக்கும் ஒருவர் பதறி போய் என்ன செய்கிறாய் என தட்டி கேட்டார்.
அதற்கு அவர் இதனை கேட்க நீங்கள் யார் என்று கூறி விட்டு அரக்கத்தனமாக இழுத்து சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் மாடியில் இருந்து தூக்கி எறிந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த பெண்ணை வீட்டில் இருந்து இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் அந்த பெண்ணை பொதுமக்களோடு சேர்ந்து அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அரசு முறையாக விவேகம் படத்துக்கு வசூலிக்கவில்லை என சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட 28 திரையரங்குகளும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக