ஷான்சி மாகாணத்தை சேர்ந்த மா என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவருக்கு பிரசவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவ மனையில் சேர்க்கபட்டார்.
மேலும் குழந்தையின் தலை பெரியதாக இருந்த காரணத்தால் சுக பிரசவம் மூலம் குழந்தைபெற்றெடுப்பது மிகவும் கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் கையெழுத்து கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த பெண்ணின் கணவர் அறுவை சிகிச்சை வேண்டாம்.
சுகபிரசவம் மூலம் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறி கையெழுத்திட மருத்துவிட்டார்.
இந்நிலையில் பிரசவவலி தாங்கமுடியாமல் அந்த பெண் மருத்துவமனை மாடியில் இருந்து கிழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அந்த பெண்ணும் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தன.
பிரசவலியை ஒரு பெண் மட்டுமே அனுபவிக்கிறாள்.
தனக்கு எப்படி குழந்தை பிறக்க வேண்டும் என்பதை அந்த பெண் தான் தீர்மானிக்க வேண்டும்.
அந்த பெண்ணிடம் தான் கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும் marcialeyuan என்பவை டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறிய போது எனது மனைவி மிகவும் தைரியமானவள்.
அவள் அப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
கருத்துரையிடுக