இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

எவ்வளவோ முயன்றும் ஆண் குழந்தை கிடைக்கவில்லை மனைவிக்கு இவர் என்ன செய்தார் தெரியுமா?

ஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்காத மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்.

ஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவரின் கோரச்செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் இவரது மனைவி மஞ்சுளா, இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன.
பிறந்தது மூன்றும் பெண் பிள்ளைகள் என்று தினமும் மனைவியை விஜய்குமார் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கணவன், மனைவிக்குள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயகுமார் மனைவி மஞ்சுளாவிடம் ஏன் ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்காமல் வெறும் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றுள்ளாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சராமாரியாக குத்தியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார்.

இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று விஜயகுமாரை தடுக்க முயன்றனர். ஆனாலும் தொடர்ந்து விடாமல் மனைவியின் உடலில் பல இடங்களில் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார்.

விஜயகுமாரிடமிருந்து மனைவியை மீட்ட பொதுமக்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மனைவியை கொலை செய்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்காததால் மனைவியை கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.