இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

மலச்சிக்கல் பிரச்னையா? சிறந்த தீர்வு

ஆலிவ் ஆயிலில் சமையல் செய்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். இதற்கு ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பது தான். அதுமட்டுமின்றி, இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், வைட்டமின் ஈ மற்றும் கே போன்றவையும் உள்ளது.

இத்தகைய ஆலிவ் ஆயில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உடனடி நிவாரணம் வழங்கும் என்பது தெரியுமா?

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மன அழுத்தம், உணவில் போதிய நார்ச்சத்து இல்லாமை, மோசமான உணவுப் பழக்கங்கள், மிகுந்த காரம் மற்றும் எண்ணெய் உணவுகள் போன்றவைகள் தான் மலச்சிக்கலுக்கு காரணம்.

வழி #1

தயிருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்துவது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இது குடலில் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக்கும். ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குடலியக்கத்தை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

1 சிறிய கப் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.

வழி #2

எலுமிச்சையில் அமிலம் அதிகம் உள்ளது. ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, குடல் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும்.

பயன்படுத்தும் முறை: 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 டீஸ்பூன் ஆவில் ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

வழி #3

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமாயின், காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் படுக்கும் முன்னும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடியுங்கள். இதனால் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.