இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

2016-ம் ஆண்டு பொலிசார் பதிவு செய்த வினோதமான வழக்கு இது தான்

சுவிட்சர்லாந்து நாட்டில் 2016-ம் ஆண்டில் பொலிசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வினோதமானது எதுவென பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.


சுவிஸில் 2016-ம் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த சம்பவங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் வினோதமான வழக்காக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் St Gallen நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அப்போது, சாலை ஓரத்தில் கார் ஒன்று நின்றுருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து அருகே சென்றுள்ளார்.

காருக்கு அருகே சென்றதும் காரின் கதவு திறந்திருப்பதை பார்த்த பொலிசார் உள்ளே சோதனை செய்துள்ளார்.

அப்போது, ஒரு பொட்டலத்திற்குள் 1,00,000 பிராங்க் பணம் கட்டு கட்டாக இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக சுற்றிலும் பார்த்தபோது தூரத்தில் 31 வயதான ஓட்டுனர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் நடந்து வந்துள்ளார்.

ஓட்டுனரிடம் விசாரணை செய்தபோது, ‘காரில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளை வாங்கி வருகிறேன்’ என பதிலளித்துள்ளார்.

‘காரில் உள்ள கட்டுக் கட்டான பணம் யாருடையது?’ என பொலிசார் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஓட்டுனர் ‘என்னுடைய பரம்பரை சொத்தில் சுமார் 70 மில்லியன் பிராங்க் எனக்கு சேர வேண்டியதுள்ளது. இதன் ஒரு பகுதி தான் இந்த பணம்’ என ஓட்டுனர் பதிலளித்துள்ளார்.

‘இவ்வளவு பணம் எடுத்துச்செல்லும்போது பாதுகாப்பு நிறைந்த நவீன காரை கொண்டு செல்ல வேண்டியது தானே?’ என பொலிசார் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஓட்டுனர் ‘ஏனெனில், காரில் இருக்கிற பணம் எனக்கு அவ்வளவு முக்கியமானது இல்லை’ என தடாலடியாக பதில் கூறியுள்ளார்.

காரில் இவ்வளவு பணத்தை வைத்துவிட்டு கதவுகளை திறந்துவிட்டுச்சென்ற ஓட்டுனரின் செயல் தான் இவ்வாண்டின் வினோதமான வழக்காக பார்க்கப்படுகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.