இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் சிக்கிய இலங்கையர்கள் நாடுகடத்தல்

போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்ற இலங்கையர்கள் இருவர் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் என்ற இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர்.இந்நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர்.

பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்த போது, குறித்த நபர்கள் போலி இந்திய கடவுச்சீட்டில் பிரான்ஸ் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர், இந்திய குடிவரவு அதிகாரிகள், பொலிஸ் நிலையங்களுக்கு இலங்கை பிரஜைகள் தொடர்பில் பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில், கொல்கத்தா சுபாஷ் சந்தரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.