இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர்.இந்நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர்.
பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்த போது, குறித்த நபர்கள் போலி இந்திய கடவுச்சீட்டில் பிரான்ஸ் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர், இந்திய குடிவரவு அதிகாரிகள், பொலிஸ் நிலையங்களுக்கு இலங்கை பிரஜைகள் தொடர்பில் பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில், கொல்கத்தா சுபாஷ் சந்தரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துரையிடுக