இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

கதை அல்ல நிஜம்: வாயால் துப்பாக்கி குண்டை பிடித்த முதல் மனிதர் இவர் தான் (Video)

டேவிட் பலேனி என்ற மந்திரவாதி பற்றி நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. அப்படியா ?  இப்படி ஒரு ஆள் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் உடனே இந்த சொல்லை( David Blaine) நீங்கள் யூ-ரியூபில் தேடினால் வகை தொகை இன்றி இவர் புரிந்த மாயா ஜாலங்கள் வீடியோவாக வரும். பார்த்தால் உங்கள் தலை சுற்றும். ஆனால் இன்று அவர் செய்திருக்கும் காரியம், ஒரு செக்கனில் அவர் உயிரை பறிக்கும் விடையம். அது என்னவென்றால் துப்பாக்கி குண்டை வாயால் பிடிப்பது. இது கனவில் கூட நடக்காது என்று பலரும் கருதலாம்.

ஆனால் டேவிட் பலோனி நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவர் தனது வாயில் துப்பாக்கி குண்டை தடுக்க கூடிய ஒருவகை பிளாஸ்டிக்கை வைத்துக்கொண்டு. தனக்கு முன்னால் ஒரு பெரிய துப்பாக்கியை வைத்து தனக்கு தானே சுட்டுக்கொண்டார். சீறிப்பாய்ந்த தோட்டா அவரது வாயில் வந்தவேளை அதனை தடுத்துள்ளார். தடுத்துள்ளார் என்பதனை விட , அந்த பிளாஸ்டிக் துண்டு தடுத்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் இதனை செய்ய எவ்வளவு மனத் துணிவு வேண்டும் ? ஒரு இஞ்சி தப்பினாலும் குண்டு அப்படியே பிடரியை துளைத்து வெளியேறும். அதிலும் முக்கிய நரம்புகள் உள்ள இடம்.

ஒருபோதும் எவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள். ஆனால் இதனை துணிச்சலாக செய்து காட்டியுள்ளார். இவர் என்ன மந்திரம் செய்கிறாரோ இல்லை மாயம் செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் முதலில் அவரது மனத் துணிச்சலை பாராட்டாமல் இருக்கவே முடியாது.


Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.