இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

இந்தியாவில் குடும்பமே சேர்ந்து வீட்டின் பணிப்பெண்ணை சீரழித்த கொடூரம்!

இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் உல்ஹாஷ்நகரில் ஒரு வசதியான குடும்பம் வசித்து வருகிறது.


தாய் Alka, அவர் மகன்கள் Ulhas More, Satish மற்றும் Alkaவின் சகோதரி Sangeeta அவர் கணவர் Deepak என எல்லோரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்கள்.

இதில் பலரும் படித்த வழக்கறிஞர்கள் ஆவார்.

இவர்கள் வீட்டில் 41 வயது மதிக்கத்தக்க ஒருவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று, Sangeeta வுக்கும் அந்த பணிப்பெண்ணுக்கும் எதோ வீட்டு வேலை விடயமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த Sangeeta தன் வீட்டில் இருந்த ஆண்களிடம் அந்த பணிப்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்ய கூறியுள்ளார்.

அவர்களும் ஒருவர் பின்னர் ஒருவராக இரக்கமின்றி அந்த பெண்ணை சீரழித்துள்ளனர். பின்னர் இது குறித்து அந்த பணிப்பெண் அந்த ஊரின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதலில் வழக்கறிஞர்கள் குடும்பம் என புகாரை வாங்க மறுத்த பொலிசார், பின்னர் புகாரை வாங்கியுள்ளார்கள்.

புகாரின் பேரில் அந்த குடும்பத்தில் Satish ஐ தற்போது கைது செய்துள்ள பொலிசார், தலைமறைவாக உள்ள மற்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.