இந்தியாவில் 2015ல் 12,602 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், மகாராஷ்டிராவில் 4,291 பேர். தமிழகத்தில் 606 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,453 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் மாதத்தில் மட்டும் 120 விவசாயிகள் மரணம்.
இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால், பின் வரும் சந்ததியினர், ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.
வீடியோவை பாருங்கள்...உங்களுக்கே புரியும்..
இருப்பினும், தமிழகத்தில், விவசாயிகளின் குரல் எடுபடாத நிலையில், இந்திய தலைநகரில் தங்களது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டனர். எங்கு சென்றாலும், போராடுவது தமிழர்கள் என்பதால் அங்கும் அதே பராமுகம்.
பார்க்கலாம், விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா என்று...
கருத்துரையிடுக