இந்நிலையில், சவுதி அரேபியாவை சேர்ந்தவர் Loujain al-Hathloul (27), இளம்பெண்ணான இவர் சமூக ஆர்வலராக இருந்து பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற தடையை மீறி செயல்பட்டதற்காக Loujain இரு தினங்களுக்கு முன்னர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Loujain ஐ கைது செய்த போலீசார் அவர் பற்றி விபரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும், அவர் தனது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனித உரிமைகள் குழுவான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் பேசிய Hadid, Loujain தொடர்ந்து துன்புறுத்தப்படுவது நியாயமில்லாத ஒன்று. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
கருத்துரையிடுக