இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

லண்டனில் தாக்குதல் நடத்தியவரை முன்னமே அடையாளம் கண்டோம்: இத்தாலி

லண்டனில் தாக்குதல் நடத்திய யூசுப் ஸாக்பாவை தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று சென்றாண்டே சந்தேகித்ததாக இத்தாலி கூறியுள்ளது.


சென்ற வாரம் லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவரை மார்ச் 2016 இல் எதிர்காலத்தில் தீவிரவாதியாக மாறக்கூடும் என்று சந்தேகித்துடன் பிரிட்டனிடமும் இத்தகவலை பகிர்ந்து கொண்டதாக இத்தாலியின் காவல்துறை அதிகாரியான கியூசெப்போ அமாட்டோ என்பவர் கூறியுள்ளார்.

அப்போது பொலோனா விமான நிலையத்தில் ஸாக்பா சிரியா செல்லும் எண்ணத்தில் துருக்கி விமானத்தில் ஏற முயற்சி செய்ததாகவும் அது தடுக்கப்பட்டது எனவும் அமாட்டோ தெரிவித்தார். அதனை அப்போதே எச்சரிக்கை விடப்பட்டதாக எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். சனிக்கிழமையன்று லண்டனில் மத்தியில் ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தனர். ஸாக்பா தொடர்பாக பிரிட்டிஷ் காவல்துறையினர் கூறும்போது 22 வயதான அவர் இதற்கு முன்பு தங்களது கண்காணிப்பின் கீழ் இருக்கவில்லை என்றனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.