சென்ற வாரம் லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவரை மார்ச் 2016 இல் எதிர்காலத்தில் தீவிரவாதியாக மாறக்கூடும் என்று சந்தேகித்துடன் பிரிட்டனிடமும் இத்தகவலை பகிர்ந்து கொண்டதாக இத்தாலியின் காவல்துறை அதிகாரியான கியூசெப்போ அமாட்டோ என்பவர் கூறியுள்ளார்.
அப்போது பொலோனா விமான நிலையத்தில் ஸாக்பா சிரியா செல்லும் எண்ணத்தில் துருக்கி விமானத்தில் ஏற முயற்சி செய்ததாகவும் அது தடுக்கப்பட்டது எனவும் அமாட்டோ தெரிவித்தார். அதனை அப்போதே எச்சரிக்கை விடப்பட்டதாக எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். சனிக்கிழமையன்று லண்டனில் மத்தியில் ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தனர். ஸாக்பா தொடர்பாக பிரிட்டிஷ் காவல்துறையினர் கூறும்போது 22 வயதான அவர் இதற்கு முன்பு தங்களது கண்காணிப்பின் கீழ் இருக்கவில்லை என்றனர்.
கருத்துரையிடுக