இந்தியாவுக்குச் செல்பவர்கள் பத்திரமாக இருக்கும்படி தங்கள் நாட்டினருக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நிலவரம் குறித்து அறிந்து கொண்டு பயணம் மேற்கொள்ளும்படியும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் மூலமாக இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனினும் இது பயண எச்சரிக்கை அல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கு அருகேயுள்ள டோக்லம் பீடபூமியில் சீனா சாலை அமைப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக