சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது.
இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. இருப்பினும், பிரச்னையை சுமூகமாக முடிக்கும் நோக்கில் இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மோசமான 7 பாவங்கள் என்ற தலைப்பில் சீனாவின் அரசு ஊடகம் ஜின்ஹுஹா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் 7 பாவங்களாக கூறப்படுவது,
அத்துமீறி நுழைதல்
இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுதல்
சர்வதேச விதிமுறைகளை நசுக்குதல்
சரியான முடிவு எடுக்க தெரியாமல் எது சரி மற்றும் எது தவறு என்பதைக் குழப்பிக்கொள்வது.
அண்டை நாடுகளை தவறாக பயன்படுத்திக்கொள்வது
பாதிக்கப்பட்ட நாடுகளை குற்றம்சாட்டுவது
தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் அதனையே மீண்டும் செய்வது.
மேலும், இந்தியா ஒரு மோசமான நாடு என கூறியுள்ளனர், நபர் ஒருவரை பொய்யான தாடி அணிவித்து சீக்கியராக வேடமிட்டு இதுதான் இந்தியா என அடையாளப்படுத்தி இந்தியாவை கிண்டல் செய்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
#TheSpark: 7 Sins of India. It’s time for India to confess its SEVEN SINS. pic.twitter.com/vb9lQ40VPH— China Xinhua News (@XHNews) August 16, 2017
கருத்துரையிடுக