நரேந்திர சிங் மேல் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நரேந்திர சிங் ஜானகியை தனது நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க அழைத்தார்.
அதற்கு ஜானகி வர மறுத்துள்ளார். இதனால் நரேந்திர சிங் தனது தந்தையுடன் சேர்ந்து ஜானகியையும் அவரது கணவரையும் தாக்கினார்.
இந்த சம்பவத்தால் ஜானகி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அவரை தடுத்து மீண்டும் அவரை தாக்கினார்கள் .
பிறகு நரேந்திர சிங் தான் வைத்திருந்த கோடாரியால் ஜானகியின் மூக்கை வெட்டினார்.
இதனால் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இதனையடுத்து ஜானகி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக