இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

இந்தியாவில் அப்பாவுக்காக காத்திருந்த 3 வயது சிறுவனை பேய் என நினைத்து அடித்துக் கொன்ற நபர்

வீதி ஓரத்தில் தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த 3 வயது சிறுவனை பேயென்று நினைத்து, அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள நாகோன் மாவட்டத்தின் சால்னா என்ற பகுதியில்,


தனது தந்தையின் வரவிற்காக வீதி ஓரமாக காத்திருந்த 3 வயது சிறுவனை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லஹ்மன் தாக்கூர் என்ற நபர், தனியாக நிற்கும் சிறுவனைப் பார்த்து பேய் என நினைத்து பயமடைந்து குறித்த சிறுவனை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் லஹ்மனின் தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர்வாசிகள் சிறுவனை அடித்துக் கொன்ற லஹ்மனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த லஹ்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை நிறைவடைந்த பின் குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.