Latest Post

தனது துறையில் முதன்மை நாயகியாக வளம் வந்துக் கொண்டிருந்த போது கஜோல் அஜய் தேவ்கானை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் செய்துக் கொண்ட போது கஜோலின் வயது 25. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன.

என்னதான் ஒருபுறம் வேலை, தொழில் முக்கியம் என்றாலும், சரியான வயதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதில் கஜோல் சரியான முடிவை எடுத்தார்.

வேலை - குடும்பம்!
வேலை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குடும்பமும் முக்கியம். கஜோல் திருமணத்திற்கு முன்னர் வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடித்து வந்தார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என அஜய் தேவ்கனுக்கு வாக்களித்தார். இதனால், தான் இல்லறத்திலும் போதுமான அளவு நேரம் செலவழிக்க முடியும் என கருதினார்.
கஜோல் - அஜய், இருவரின் இல்லறம் 18 வருடங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
விவாகரத்து தான்...
இடைவேளை
திருமணத்திற்கு முன் ஒன்பது வருடங்களாக நடித்து வந்தார் கஜோல். திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் என கூறிய போதும். ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டார் கஜோல்.
இந்த நேரத்தில் ஒரு அமைதி அவருக்கு தேவைப்பட்டது. அதே போல தனது குடும்பத்தில் தனது பங்கை உணர்ந்து நல்ல மனைவியாகவும் விளங்கினார் கஜோல்.
இரகசியம்!
 
மகிழ்ச்சி!
திருமணத்திற்கு பிறகு, நடிப்பை காட்டிலும், இல்லறத்தில் மனைவி, தாய் என தனது பங்கு பெரியது என்பதை உணர்ந்த கஜோல். ஒரு சிறந்த துணையாக தனது கடமையை கடைப்பிடித்து வந்தார்.
அதே போல, பிள்ளைகள் ஒரு வயதை எட்டிய பிறகு, மீண்டும் தான் நடிக்க சரியான நேரம் ஒதுக்கி, மீண்டும் தனது நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி, வேலையிலும் சிறந்து விளங்கினார்.

  புரிந்துக் கொள்ளும் கணவர்!

புரிந்துக் கொள்ளும் கணவர்!
ஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு, வீடு, நடிப்பு என இரண்டையும் சமாளிப்பது மிகவும் கடினம். இந்த தருணத்தில் தான் அஜய் தேவ்கான் கஜோலை சரியாக புரிந்துக் கொண்டு அவர் அழுத்தம் இன்றி தனது வேலைகளை செய்ய பெரும் காரணியாக இருந்தார்.

 
விவாகரத்து தான்...
அஜய் மற்றும் கஜோல் திருமணம் செய்துக் கொண்ட போது, பலரும் இவர்களது திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என புரளி பேசினார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல 18 ஆண்டுகள் வெற்றிகரமாக சந்தோசமான தம்பதியாக, மற்ற நட்சத்திர ஜோடிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் கஜோல் மற்றும் அஜய்.
மகிழ்ச்சி!
 
இரகசியம்!
எங்கள் உறவு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம், நான் அதிகம் பேசுவேன், அஜய் அமைதியாக அதை பொறுமையுடன் கேட்பார் என கூறுகிறார் கஜோல்.
இந்த சூப்பர் ஜோடிக்கு நைசா மற்றும் யாக் எனும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என்னை கற்பழித்தார் என்று முதலில் புகார் கொடுத்த மாடல் அழகி, நீதிமன்றல் வராத காரணத்தால் குற்றவாளி தப்பித்த சம்பவம் ஒன்று பிரிட்டனில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரித்தானியாவின் எசிக்ஸ் மாநகரில் வசிக்கும், இவஞ்சலிஸ்டா என்னும் 30 வயதுப் பெண், 28 வயதான வாலிபர் ஒருவர் தன்னை கற்பழித்தாக பொலிசாரிடம் கூறினார். இதனை அடுத்து பொலிசார் படாத பாடு பட்டு அவரை தேடி கண்டு பிடித்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.


இருப்பினும் அவருக்கு எதிராக இவஞ்சலிஸ்டா சாட்சி சொல்ல முடியாது என கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார். இதனால் வழக்கு அடிபட்டுப் போய் குற்றவாளி விடுதலையாகியுள்ளார். தற்போது குறித்த நபரோடு தான் தொடர்பில் உள்ளதாகவும். உண்மையில் அவர் தன்னை கேட்காமல் தன்னோடு உடலுறவு கொண்டார். இருப்பினும் அதனை தன்னால் மறக்க முடியவில்லை என்றும். அது மிகவும் ஒரு இன்பகரமாக விடையம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக தான் சாட்சி சொல்ல விரும்பவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்து. பொலிசாரை கையாலாகாதவர்கள் ஆக்கியுள்ளது. என்ன கொடுமை சார்.  கற்பழித்தார் என்கிறார்.. ஆனால் அது நல்லது என்கிறார்...

உங்கள் உடலை பற்றி உங்களுக்கு எத்தனை விஷயங்கள் தெரியும்? நம் உடலில் வெளிப்புறமாக தெரியும் விஷயங்கள் மட்டும் தான் நமக்கு தெரியும். உள்ளே எப்படி செரிமானம் நடக்கிறது? இரத்தம் எப்படி சீறிப்பாய்ந்து செய்கிறது, கொழுப்பு எப்படி சேர்கிறது, கரைகிறது என ஒரு விஷயமும் நமக்கு தெரியாது.

சரக்கடிச்சா ஏன் நீங்க ஒரு விஷயம் மறக்குறீங்க? அதுக்கு காரணம் ஆல்கஹால் இல்ல, உங்கள் மூளையில நடக்குற சில மாற்றங்கள் தான் அதுக்கு காரணம். இப்படி நீங்க உங்க உடம்பு பத்தி கத்துக்க வேண்டியது விஷயங்கள் சிலவன இருக்கு வாங்க பார்க்கலாம்...

ஆல்கஹால்!
குடி போதையில் இருக்கும் போது நீங்கள் எதையும் மறந்துவிடுவதில்லை. ஆனால், நீங்கள் குடித்து முடித்து, தூங்கி எழும் போது ஒரு பிளான்க் அவுட் (Blank Out) நிகழ்வு நடக்கும். இந்த நிகழ்வின் போது நினைவுகளை சேமிக்க மூளை தவறிவிடும். இதனால் தான், குடித்த போது நீங்கள் பேசிய சில விஷயங்களை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

இரத்த நாளம்!
மனித உடலில் இருக்கும் மொத்த இரத்த நாளத்தின் நீளம் 96,000 கிலோமீட்டர்.

  
எலும்பு!
நமது உடலில் இருக்கும் எலும்புகளில், அதிகமானவை கைகளில் தான் இருக்கின்றன. இரண்டு கை மற்றும் கை விரல்களில் மட்டும் 54 எலும்புகள் இடம்பெற்றுள்ளன.

  
இடது கை!
உலகில் உள்ள பத்து சதவீத ஆண்கள் மற்றும் எட்டு சதவீத பெண்கள் இடது கை பழக்கம் கொண்டுள்ளவர்கள் ஆவார்கள்.

  

மூளை!
மூளையின் செல்களில் ஏற்படும் சேதத்தை முற்றிலுமாக என்றும் சரி செய்ய முடியாது.

  
பிங்க்!
குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.

  
450!
சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.

  
ஒரு நிமிடத்தில்...
ஒவ்வொரு நிமிடமும் மனித உடலில் நூறு மில்லியன் செல்கள் இறந்து போகின்றன.

  

20%
தினசரி நீங்கள் எரிக்கும் கலோரிகளில் 20% மூளையால் எரிக்கப்படுகிறது. உடலால் வெறும் 2% தான் எரிக்கப்படுகிறது.

  
பற்கள்!
நீங்கள் பிறக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே பற்கள் வளர துவங்கிவிடும்.

பிரசவ வலி தாங்கமுடியாததால் கர்ப்பிணி பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஷான்சி மாகாணத்தை சேர்ந்த மா என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.


அவருக்கு பிரசவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவ மனையில் சேர்க்கபட்டார்.

மேலும் குழந்தையின் தலை பெரியதாக இருந்த காரணத்தால் சுக பிரசவம் மூலம் குழந்தைபெற்றெடுப்பது மிகவும் கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் கையெழுத்து கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த பெண்ணின் கணவர் அறுவை சிகிச்சை வேண்டாம்.

சுகபிரசவம் மூலம் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறி கையெழுத்திட மருத்துவிட்டார்.

இந்நிலையில் பிரசவவலி தாங்கமுடியாமல் அந்த பெண் மருத்துவமனை மாடியில் இருந்து கிழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் அந்த பெண்ணும் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தன.

பிரசவலியை ஒரு பெண் மட்டுமே அனுபவிக்கிறாள்.

தனக்கு எப்படி குழந்தை பிறக்க வேண்டும் என்பதை அந்த பெண் தான் தீர்மானிக்க வேண்டும்.

அந்த பெண்ணிடம் தான் கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும் marcialeyuan என்பவை டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறிய போது எனது மனைவி மிகவும் தைரியமானவள்.

அவள் அப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

போலீஸாரை ஏமாற்றிவிட்டு அவர்கள் காரிலியே தப்பி சென்ற இந்த பெண், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மாபெரும் கராத்தே லெஜன்ட், ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்த ரகசிய மர்மம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது..


அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்பது தான் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மே 10, 1973 அன்று மாபெரும் கராத்தே லெஜன்ட் ப்ரூஸ்லீ அவரது இல்லத்தில் இருந்து உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

லீ வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக டாக்டர்கள் பரிசோதித்து பெருமூளை வீக்கம் என கண்டறிந்தனர். மருத்துவர்களால் மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்க முடிந்தது என்பது இங்கு குறிபிடத்தக்கது..

மீண்டும் தலைவலி மற்றும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் மருத்துவா்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு மரணத்தை தழுவினாா் ப்ரூஸ்லீ.

லீ இறப்பில் மர்மம் என்று எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகத்தால் நடத்தப் பட்ட ஒரு படுகொலை என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

டைரி குறிப்புகள்,

திட்டமிட்டு, ஆஸ்பிரின் அதிக அளவில் கூல் ட்ரிங்க்ஸ் உடன் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்துக்கு காரணம் என தொியவந்துள்ளது.

இறக்கும் தருவாயில், ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார் ஆனால் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம் அவர் மறுத்துவிட்டார்.

மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாா். அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ப்ரூஸ்லீ மனைவி சொன்ன காரணங்களையே திருப்பி சொல்ல முற்பட்டது…

இன்னும் சொல்லபோனால் லீ இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாக ஒரு நியூஸ் வெளியே பரவியது.

மருத்துவ நிர்வாகமும் ப்ரூஸ்லீ மரணிப்பதையே ஆவலுடன் எதிர் பார்த்தது. அதே போல ப்ரூஸ்லீ மாண்டார்..அவர் இறந்த இருபது நாட்களில், அவருடைய மனைவி அமெரிக்கா பறந்தார்..

தற்போதைய டெக்னாலஜி உலகில் செக்ஸ் உறவு கொள்ள நிஜமான பெண்களை விட பொம்மை பெண்களை பலர் விரும்புகின்றனர். இவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்வதற்கு என்றே அழகழகான வடிவில் செக்ஸ் பொம்மைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.


இந்த நிலையில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரையன் ஹோப்கின்ஸ் என்பவர் செக்ஸ் உறவுக்காக 3அடி உயரத்தில் ஒரு சிறுமி போன்ற பொம்மையை ஆர்டர் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவருடைய செல்போனில் பொம்மை சிறுமியுடன் விதவிதமாக உறவு கொண்டது போல் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டது.

சிறுமியுடன் உறவு கொள்வது போல் மனதில் நினைத்தால் கூட அது குற்றம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

சில செய்திகள், சில அறிவிப்புகள் கேட்ட நொடியிலேயே நம்மை உலுக்கி எடுக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தான் இது.


சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ. இவர் ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி டெவலப்மெண்ட் மூலமாக பெரும் பணக்காரராக திகழ்கிறார்.

நினைத்தால் எதையும் சாத்தித்து காட்டும் அளவிற்கு பணம் இருக்கும் இவரால் ஒன்று மட்டும் முடியவில்லை. இவரது ஒரே மகள் ஓரினச்சேர்க்கையாளர்.

இவரை இதில் இருந்து மாற்றி, எவரால் திருமணம் செய்துக் கொள்ள முடியோ அவருக்கு தான் தலைப்பில் கூறியிருக்கும் பரிசு தொகை போய் சேரும்.

2012-ல்

2012-ல் தான் முதல் முறையாக செசில் சாவோ உலகை உலுக்கும் அளவிற்கு ஒரு தலைப்பு செய்தியை உருவாக்கினார். அப்போது இவர் தன் மகளை லெஸ்பியன் வகையில் இருந்து மாற்றும் ஆணுக்கு 60 மில்லியன் டாலர்கள் சன்மானம் என அறிவித்தார்.

எகிறி நிற்கும் பரிசு தொகை!

இந்த 60 மில்லியன் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. 2014-ல் 120 மில்லியன் டாலர்கள் ஆனது, இப்போது கடைசியாக 180 மில்லியன் டாலர்களில் வந்து நிற்கிறது. அதாவது ஏறத்தாழ இலங்கை மதிப்பில் 3,142 கோடியே 15 லட்ச ரூபாய் ஆகும்.

கிகி!

செசில் சாவோவின் லெஸ்பியன் மகளான கிகி தனது தந்தை அறிவிக்கும் சலுகை மற்றும் சன்மானம் போன்றவற்றை மறுத்து வருகிறார். அவர் தனது லெஸ்பியன் துணையுடனே வாழ விரும்புகிறார்.

பொதுவெளி கடிதம்!

பொதுவெளியில் கிகி தனது தந்தை செசில் சாவோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் செசில் சாவோ தன்னையும், தனது துணை சீன யேவ்-யும் சாதாரணமான, கண்ணியமான மனிதர்களாக பார்க்க வேண்டினார்.

ஒத்துப்போகாது…

“உங்கள் மகளாக உங்களை மகிழ்விக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், உறவு என வரும் போது, உங்கள் எதிர்பார்ப்பில் நானும், ரியாலிட்டியில் நானும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போக முடியாது.” என மேலும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

மனம் ஒவ்வாத தந்தை…



ஆனால், மகளின் முடிவில் செசில் சாவோவிற்கு துளியும் சம்மதம் இல்லை. இன்று இது உலகிற்கு பரிச்சயம் ஆன உறவு முறையாக இருப்பினும், 77 வயதான செசில் சாவோவிற்கு இதை ஒப்புக்கொள்ள மனமில்லை.

என்ன செய்வது?

ஒரு பேட்டியில், தனது மகளின் முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவளை மதிக்க வேண்டும். தனது தந்தையின் இந்த மாற்றம் கிகிக்கு பெருமூச்சு விடும் நிலையாகவும், ஒரு பெரிய இடரில் இருந்து தப்பித்தது போலவும் இருக்கிறது.

பிரிந்து வாழும் நிலை…

தன் மகளை மதிக்கிறேன் என்று தான் செசில் சாவோ கூறினாரே தவிர, அவரது துணையை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள அல்ல. ஆம், கிகி மற்றும் செசில் சாவோ பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அப்பாடா!

தந்தையின் இந்த முடிவால், கிகிக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரது தொல்லை விட்டது போதும் என்று வாழ்ந்து வருகிறார். தனது துணையுடன் நிம்மதியாக தனது வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து வருகிறார் கிகி.

இதுவும் காதல் தான்!

ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற போதிலும், இவர்கள் இருவர் மீது வைத்திருந்த காதல், கோடிகளை வென்று, அன்பும், நிம்மதியும் மட்டுமே போதும் என்பதை போதிக்கிறது.

எது எப்படியோ, இதுவும் காதலுக்கு, காதலற்கு ஒருவகையான எடுத்துக் காட்டு தான். பணத்தை வெல்ல மனதால் முடியும் என நிரூபிக்கும் எடுத்துக்காட்டு.

ஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்காத மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்.

ஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவரின் கோரச்செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் இவரது மனைவி மஞ்சுளா, இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன.
பிறந்தது மூன்றும் பெண் பிள்ளைகள் என்று தினமும் மனைவியை விஜய்குமார் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கணவன், மனைவிக்குள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயகுமார் மனைவி மஞ்சுளாவிடம் ஏன் ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்காமல் வெறும் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றுள்ளாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சராமாரியாக குத்தியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார்.

இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று விஜயகுமாரை தடுக்க முயன்றனர். ஆனாலும் தொடர்ந்து விடாமல் மனைவியின் உடலில் பல இடங்களில் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார்.

விஜயகுமாரிடமிருந்து மனைவியை மீட்ட பொதுமக்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மனைவியை கொலை செய்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்காததால் மனைவியை கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கேமராக்கலில் ஏன் சிக்குகின்றன என்ற கேள்வி பெரும்பாலும் அனைவரின் மனதில் இருப்பதுதான்.பழைய காலத்து ப்லிம் கேமிரா முதல் தற்போதைய ஸ்மார்ட்போன் கேமிரா வரை இது பொதுவான ஒன்றுதான். கேமராவின் ஆவிகள் ஏன் சிக்குகின்றன என்பதை பார்ப்போம்...

இமேஜ் அலியசிங் (image aliasing) எனபது புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்யும் கேமிரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் கோளாறுகள் ஆகும். இதன் காரணமாக பேய் போன்ற உருவங்கள் தோன்றக்கூடும்.

ஸ்டீரியோஸ்கோபி மாயையை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் சிக்குவது வழக்கமானது தான்.
ஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா??
டபுள் எக்ஸ்போஷர் எனப்படும் சிறப்பு விளைவை உருவாக்க வேண்டுமென்று எடுக்கப்படும் புகைப்படங்களிலும் ஆவிகள் மற்றும் பேய்களை உருவாக்கலாம்.

இதற்காக உண்மையில் பேய்கள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் தொழில்நுட்பங்களால் இது போன்ற அமானுஷ்யங்களை உருவாக்க முடியும்.

பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்டது கோப்ரா வகை நாகங்கள், ஆப்ரிக்காவில் அதிகம் வாழ்கிறதாக கூறப்படுகிறது.

ஆனால், ஆசியாவில் அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம் தான். இவை தமிழகத்தின் ஒருசில பகுதியில் வாழ்ந்து வருகின்றது.

விஷத்தன்மை மிகுந்த இந்த ராஜ நாகம் தமிழகத்தில் ராஜ பாளையம், சதுரகிரி மலை, நாகர்கோயில், மற்றும் மாஞ்சோலை காட்டு பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது.

ராஜ நாகம் பற்றிய உண்மைகள்
http://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2017/09/raja_nagam003/img/
ராஜ நாகம் தெற்காசிய பாம்பு வகையாகும். தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக காணப்படும் இந்த ராஜ நாகம் 18 அடி நீளம் வரை இருக்கும்.

கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே பாம்பு வகை ராஜ நாகம் தான். ராஜனாகத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். இந்த நாகம் மூங்கில் காட்டு பகுதியில் அதிகமாக வாழ்கின்றது.


http://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2017/09/raja_nagam002/img/
ராஜ நாகத்தை மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும் போது, இதன் விஷத்தன்மை மிகவும் வீரியமானது. ஒரு மனிதரை கடித்த 60 நொடியில் கொன்று விடும்.

இந்த ராஜ நாகம் தனது நீளத்தில் பாதிக்கும் மேல் உயர்த்தி படம் எடுத்து காட்டும் திறன் கொண்டது. பாம்புகளில் இவை மட்டு தனது இனத்தை சேர்ந்த பிற பாம்புகளை கொன்று தின்னும் பழக்கம் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் ராஜபாளையம் வன பகுதியில் உள்ள ராஜநாகம் பற்றிய ஆய்வில், 20- 25 அடி நீளமும், 5-7 அடி உயரம் படம் எடுக்கும் தன்மையும் ராஜநாகம் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வகை செய்யும் (ஹார்மோன்) நாளமில்லா சுரப்புத் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிற நிலையில்,  க்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தற்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமேபெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும்உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம்உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமிள்ளா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செயற்கையாகச் செலுத்திப் பார்த்ததில் உடல் பருமனுக்கும் நீரிழிவுக்கும் மருந்தாவது காணப்பட்டது.

மனிதர்களிடத்தும் இச்சோதனை வெற்றியடையும் என்றும் விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை குருதியில் செலுத்துவதன் மூலம் நீரிழிவு குறைபாட்டை கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும், டானா-ஃபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி ப்ரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளதாக அமெரிக்க மருத்துவ சஞ்சிகையொன்று தெரிவிக்கின்றது

அமெரிக்காவில் உள்ள பிட்டிஸ்பர்க் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடிரென பிரசவ வலி வந்தது.

காரில் நிறுத்தி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று பார்த்தால் அக்கம்பக்கம் யாரும் இல்லை. இந்த நிலையில் திடீரென குழந்தை வெளியே வர தொடங்கியது

அந்த நேரத்தில் மனதை தைரியப்படுத்தி கொண்டு தனக்குத்தானே குழந்தை பெற்றுக்கொண்டார் அந்த பெண்.

ஆனால் அந்த குழந்தை பனிக்குடம் உடையாமல் அப்படியே வந்தது. இந்த நிலையில் அவர் விரைந்து மருத்துவமனை சென்றதால் குழந்தையும் தாயும் காப்பாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாதவிடாய் உதிரப்போக்கினால் ஏற்பட்ட கறை குறித்து ஆசிரியை கடிந்துகொண்டதால் 12 வயது மாணவி தற்கொலைசெய்துகொண்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். பாளயங்கோட்டையில் வசிக்கும் சையது அகமது – ரசவம்மாள் பானு தம்பதியின் 12 வயது மகள், செந்தில் நகரில் உள்ள ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ஆம் வகுப்புப் படித்துவந்தார்.



இவர் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கட்டடத்திலிருந்து கீழே குதித்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அந்தச் சிறுமி உயிரிழந்தார். ’12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்?’ தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அந்த மாணவி எழுதிய கடிதத்தில், “எனக்கு வேறு வழி தெரியவில்லை.


செத்துத்தான் ஆகனும். நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது என் மீது எந்தப் புகாராவது வந்ததா? ஆனால், ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் மிஸ் ஏன் இப்படி புகார் சொல்கிறார்கள்? நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்? அந்த மிஸ் நல்லா இருக்க மாட்டாங்க. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது. _மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் 12வயது மாணவி தற்கொலை!!


'12 வயதுக் குழந்தைக்கு நடந்த துயரக் கதையிது மாணவி எழுதிய தற்கொலை குறிப்பு இது குறித்து பிபிசியிடம் பேசிய ரசவம்மாள், “இந்த ஆசிரியை பல நாட்களாகவே என் குழந்தையை துன்புறுத்திவந்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தக் குழந்தை வயதுக்குவந்தது. அதற்காக ஒரு வாரம் பள்ளிக்கூடத்தில் சொல்லிவிட்டுத்தான் விடுமுறை எடுத்தோம். பள்ளிக்கூடத்திற்கு குழந்தை திரும்பிச் செல்லும்போது,


ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லையெனக் கேட்டு அடித்திருக்கிறார்கள்” என்றார். மேலும், “கடந்த சனிக்கிழமை பள்ளிக்கூடத்திற்குப் போனவுடன் மூன்றாவது முறையாக என் மகளுக்கு மாதவிடாய் வந்திருக்கிறது. இது குறித்து ஆசிரியையிடம் சொன்னவுடன், வகுப்பு மாணவர்கள் முன்பாகவே ஒரு குச்சியால் சுடிதாரைத் தூக்கிப் பார்த்திருக்கிறார்.


மேலும் கரும்பலகையைத் துடைக்கும் துணியைக் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். மேலும் வகுப்புக்கு வெளியேயே நிற்கவைத்திருக்கிறார். 12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்?” என்கிறார் ரசவம்மாள். வீட்டில் பெற்றோரிடம் இது குறித்து சொன்ன அந்த மாணவி, ஞாயிற்றுக் கிழமை அருகிலிருந்த கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.


மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் 12வயது மாணவி தற்கொலை!! : '12 வயதுக் குழந்தைக்கு நடந்த துயரக் கதையிது! மாணவியின் பள்ளி என்ன கூறுகிறது? தனியார் பள்ளிக்கூடமான ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3ஆம் வகுப்பு முதலே ஆங்கில வழிப் பிரிவில் இந்த மாணவி படித்துவந்துள்ளார்.


மாணவியின் தந்தை சையது அகமது ஆட்டோ ஓட்டுனராக வேலைபார்த்துவருகிறார். இது குறித்து ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியை கலாவதியிடம் கேட்டபோது, “காவல்துறை விசாரித்தது. மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்தார்கள். அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம்.


அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. ஆசிரியை திட்டியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறினார். இது தொடர்பாக மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி பள்ளிக்கூடத்திலும் வகுப்பில் இருந்த 16 மாணவர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளார். விரைவில் அந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் கபில் சரத்கர், இந்த விவகாரத்தில் தற்கொலை என்று மட்டும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடந்துவருவதாகத் தெரிவித்தார். மேலும், மாதவிடாய் குறித்த ஆசிரியர் திட்டியதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லையென்றும் அவர் கூறினார்.

இளைஞர் ஒருவரால் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி வீதியில் இழுத்து செல்லும் காணொளியொன்றை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.


இந்த சம்பவம் சீனா - Henan பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞனின் தாய் மற்றும் தந்தையின் திருமண வாழக்கையை சீர்குழைத்ததன் காரணமாக குறித்த இளைஞன் அந்த பெண்ணை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணும் அந்த இளைஞனின் தந்தையும்,


சுற்றுலா செல்ல ஆயத்தமான போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை: சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை சோனி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது. சோனி தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியா கி. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் சர்ச்சையில் சிக்கியது. சீரியலின் கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.

9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை காட்டி வந்தனர். 9 வயது அஃபான் கான் கணவராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவியாகவும் நடித்தனர். ஒரு சிறுவன் இளம்பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து முதல் இரவு அறைக்குள் செல்வது ஆகியவற்றை பார்த்த மக்கள் சீரியலுக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர். புகார்கள் எழுந்ததை அடுத்து சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை இரவு 8. 30 மணியில் இருந்து 10.30 மணிக்கு மாற்றினார்கள். அப்படியும் எதிர்ப்பு வலுத்தது.

எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சோனி சேனல் பெஹ்ரிதார் பியா கி சீரியலை 28ம் தேதி முதல் ஒளிபரப்பவில்லை. சீரியலை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் புடைவை சிக்கியதில் இடம்பெற்ற விபத்தில் தலையில் அணிந்திருந்த கிளிப் தலைக்குள் ஏறியதால் அவர் மயங்கிச் சரிந்தார். சுயநினைவை இழந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வேலணையில் இடம்பெற்றது. குறித்த பெண் தனது கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இவரது சேலை மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் சிக்கியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்தப் பெண்ணினு டைய தலையில் குத்தியிருந்த கிளிப் கழன்று தலைக்குள் குத்திச் செருகியதில் அவர் சுயநினைவை இழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

சுயநினைவை இழந்த அவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப் பட்டார்.

தலைநகர் பரிசில் இடம்பெற்ற தேர்திருவிழா ஒன்றில் தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியாராக இருக்கின்ற நித்தியானந்தா வீதி உலா வந்த விடயம் அங்குள்ள தமிழர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியார்களில் ஒருவராக நித்தியானந்தா இருப்பதோடு, பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அவரது ஆசிரிமத்தவர்கள் இலக்காகி வருகின்றனர்.

இந்நிலையில் பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர் பவனி கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் பவனி வந்திருந்தது.

தேர்பவனி வந்த வீதியில் நித்தியானந்தாவின் உருவப்பொம்மையுடன் அவரது வெள்ளையின பக்தகோடிகள் வீதி உலா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முத்தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவத்தின் 22வது நாளாகிய இன்று முத்தேர் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
http://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2017/08/paris/img/
இதன்போது விநாயகர், முருகன் மற்றும் அம்மன் தெய்வங்களின் தேர் இடம்பெற்றிருந்ததுடன், தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், கரகாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும், ஆண்கள் காவடி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக கொடூர தாய் Mother Killed Child. இது போன்ற சாவு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. கடவுளே.

பெங்களூர் ஜே.பி நகர் அருகே உள்ள ஜரகனஹள்ளியில் வசித்து வருபவர் ஸ்வாதி சர்க்கார்.


இவரது கணவர் பெயர் கஞ்சன் சர்க்கார். ஐ.டி கம்பெனி ஊழியர். கணவரை விட்டு பிரிந்த ஸ்வாதி தற்போது தனியாக 9 வயது மகள் ஸ்ரேயாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஸ்வாதி தான் குடியிருக்கும் வீட்டின் 3வது மாடிக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்று அங்கிருந்து பெற்ற மகள் என்றும் பாராமல் கீழே தூக்கி எறிந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ஸ்ரேயா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இருந்தாலும் ஆத்திரம் அடங்காத ஸ்வாதி கீழே வந்து ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மகளை படிக்கட்டு வழியாக ரத்தம் சொட்ட சொட்ட தரதரவென இழுத்து சென்றார்.

இதனை பார்த்த அந்த குடியிருப்பில் இருக்கும் ஒருவர் பதறி போய் என்ன செய்கிறாய் என தட்டி கேட்டார்.

அதற்கு அவர் இதனை கேட்க நீங்கள் யார் என்று கூறி விட்டு அரக்கத்தனமாக இழுத்து சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் மாடியில் இருந்து தூக்கி எறிந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த பெண்ணை வீட்டில் இருந்து இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் அந்த பெண்ணை பொதுமக்களோடு சேர்ந்து அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அரசு முறையாக விவேகம் படத்துக்கு வசூலிக்கவில்லை என சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட 28 திரையரங்குகளும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரவணைக்க யாரும் இல்லாததால் 17வயது சிறுமி ஒருவர் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சாராகிலா மாவட்டத்தை சேர்ந்த ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 17வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ண ராம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது பழக்கம் நெருக்கமாகவே பிரியா கற்பமாகியுள்ளார். இதை அறிந்த அவரது காதலர் ப்ரியாவை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.


ப்ரியா கற்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

இதனால்  சுமார் 4 மாதங்கள் தங்க வீடு இன்றி ப்ரியா தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார்.

http://liveday.in/wp-content/uploads/2017/08/

பின்னர் நிறைமாத கர்ப்பிணியான பிரியா அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பிரியாவை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் மீண்டும் தங்க இடமின்று தவித்த பிரியா கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அதிகாலை 7 மணியளவில் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்பகுதியில்  இருந்த யாரும் ப்ரியாவிற்கு உதவ முன்வரவில்லை.

பின்னர் அந்த வழியாக சென்ற ஓம் பிரகாஷ் என்பவர் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த தாயையும் குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார்.



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடுதெருவில் வலியால் துடித்து கொண்டிருந்த ப்ரியாவிற்கு உதவ யாரும் முன்வராத புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மனிதநேயம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

பெரும்பாலான ஆண்களின் மனதில் எழுகின்ற மன ரீதியிலான காரணங்களே அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட விடாமல் செய்கிறது.

பயம், தன்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட போதுமான சக்தி இருக்கிறதா என்று பல கேள்விகள் மனதில் எழுவதால் அவள்களால் உச்சத்தை எட்ட முடிவதில்லை.


சிறு வயதாக இருக்கும்பொழுது பாலியல் ரீதியலான பிரச்சனைகளை ஒரு சிலர் அனுபவித்து இருப்பார்கள் அவர்களுக்கும் இது போன்ற பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது.

மேலும், மாத்திரை, மதுபழக்கம், புகைப்பிடித்தல், ஹார்மோன் பிரச்சனை போன்றவைகளுக்கு சிறந்த டாக்டர்களிடம் உடல் ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

இதில் தண்டுவட பிரச்னை ஆகியவையும் ஆண்களை தாம்பத்திய உறவில் சரியாக இயங்கவிடாமல் செய்கிறது. இதற்கு செக்ஸ் தெரபிஸ்ட் வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவது நன்று.

இதற்காக போலியாக இருக்கும் டாக்டர்களிடம் போவதை தவிர்த்து நன்கு படித்தவரா என்று பார்த்து சென்று அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் ஸ்ட்ரெச்சரில் வார்டுக்கு கொண்டு செல்லும் போது லிப்டுக்குள் சிக்கி தலை வேறு, உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக இறந்தார்.


ஸ்பெயினில் சேவிலே அருகேயுள்ள தாஸ் ஹெர்மனாஸ் நகரை சேர்ந்த 25 வயதுடைய  ரோசியோ  கார்டெஸ் நுனெஷ்.

இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரோசியோவை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
http://img.maalaimalar.com/InlineImage/
அதைத் தொடர்ந்து அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு ‘லிப்ட்’ மூலம் கொண்டு சென்றனர்.

அப்போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயல்பட தொடங்கியது.

அந்த நேரம் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த ரோசியோவின் தலையை ‘லிப்ட்’ கதவு நசுக்கியது.

இதனால் அவர் தலை வேறு, உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

வடகொரியா மீது உலக நாடுகள் பல சர்வதேச தடைகள் மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதுபோன்ற தடைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.


ஆனால், வடகொரியா இதுவரை தன்நிலையில் இருந்து மாறாமல்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடகொரியாவின் ரூம் நம்பர் 39 என் கூரப்படுகிறது. வடகொரியாவில் உள்ள பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் நம்பர் 39 உள்ளது.


இங்குதான் கள்ளப்பணம் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வடகொரியாவால் வாழமுடிகிறது. சீன கறுப்பு சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் விற்கப்படுகிறது. இப்படித்தான் வடகொரியாவின் பொருளாதாரம் தடுமாற்றமின்றி நிலையாக உள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் மின் உயர்த்தியில் கட்டிலுடன் நுழைக்கப்பட்டபோது திடீரென மின்னுயர்த்தி எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு வார்டுக்கு மாற்ற கட்டிலுடன் மின்னுயர்த்தியில் மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது கட்டில் உள்ளே நுழையும் முன்பே மின்னுயர்த்தி திடீரென இயங்கியது. இதனால் கட்டிலில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார்.

நல்லவேளையாக குழந்தை தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பளு தூக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற நபர் ஒருவர் தெரு சண்டையில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Andrey Drachyov(22) என்பவர் பளு தூக்கும் போட்டியில் கடந்த 2008 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவர்.

தற்போது சர்வதேச அளவில் ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் Khabarovsk என்ற நகரில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

மற்றவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில் Anar Allakhveranov என்ற நபர் விளையாட்டு வீரரை தாக்கியுள்ளார்.

சினிமா சண்டைக்காட்சிகளில் வருவது போல் அந்நபர் கால்களை சுழற்றி விளையாட்டு வீரரின் தலையில் அடித்துள்ளார்.


இத்தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்து மீண்டும் எழுந்துள்ளார்.

அப்போது, அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர் மறுபடியும் அவரது தலையில் உதைக்கவும் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

ஆத்திரம் தீராத அந்த நபர் மயங்கி கிடந்த விளையாட்டு வீரரின் தலையில் பலமுறை கையால் குத்துக்கிறார்.

சில நிமிடங்களில் நண்பர்கள் தடுத்ததும் தாக்கிய அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

மயங்கி கிடந்த விளையாட்டு வீரரை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

விளையாட்டு வீரரை தாக்கிய காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.

விளையாட்டு வீரரை தாக்கி கொலை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் இரண்டு நாட்களாக தாய்க்கு பயந்து கதறி அழும் குழந்தையின் காணொளி வைரலாகி வருகிறது.

குழந்தை ஒன்றை பாடம் படிக்க சொல்லி அவரது தாய் கொடுமை படுத்துவது போன்ற அந்த காணொளியை இந்திய கிரிக்கட் அணியின் தலைவரான விராத் கோலி தனது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றியுள்ளார்.

அதில் ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் கணித பாடம் கற்பிக்கும் போது, மிக கொடூரமாகவும் மிருகத்தனமாகவும் நடந்து கொள்கிறார்.

இந்த மிரட்டலுக்கு பயந்த அக்குழந்தை இரு கை கூப்பி வேண்டாம், வேண்டாம் என்பது போல் கதறி அழுகிறது.

இதற்கு கோலி, 'குழந்தையின் வலியும் கோபமும் புறக்கணிக்கப்பட்டு, பாடம் கற்பிக்கும் போது தாயின் இரக்கம் முற்றிலுமாக ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டது.

இந்த காணொளியை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. குழந்தையிடம் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டால், அக்குழந்தைக்கு பாடம் ஏறாது. இதை பார்த்து மிகவும் மனம் வருத்தமடைகிறது' என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதே போன்று இந்திய கிரிக்கெட் வீரர் தவானும் இந்த காணொளியை பதிவேற்றம் செய்து குழந்தைகளை அவர்கள் போக்கில் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.